×

ஏப்.12-ல் கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பங்கேற்பு!!

டெல்லி : மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார். இந்தியாவில் மக்களவை தேர்தல் வருகின்ற 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வருகின்றன. 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளன. இந்த நிலையில் திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் ரோட் ஷோவில் ஈடுபடுகிறார்.

இதனிடையே தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார். இந்த நிலையில், ஏப்.12-ம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. ஏப்.12-ல் கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் பங்கேற்கிறார்.மேலும் தேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post ஏப்.12-ல் கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Chief Minister ,Rahul Gandhi ,Stalin ,Delhi ,Senior ,Tamil Nadu ,Lok Sabha elections ,India ,
× RELATED விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர்...